Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்: சோகத்தில் மாணவிகள்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:02 IST)
பள்ளியில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்: சோகத்தில் மாணவிகள்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் என்ற பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சரவணன் என்ற ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் அவர் பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் இனிமையாக பழகும் சரவணன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தது சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments