Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (12:19 IST)
ஒரே பள்ளியைச் சேர்ந்த பதிமூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வேலியே பயிரை மேய்வது போன்று ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பரமக்குடி அருகே அரசு பள்ளி ஒன்றில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த புகாரின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராமராஜன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் என்பவரை காவல்துறை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சி.பி.எஸ்.இ தேர்வில் முறைகேடு: தேர்வு ரத்தாகுமா?