Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுக்கடை திறக்க அனுமதி, டீக்கடை திறக்க அனுமதி இல்லையா? டீ பிரியர்கள் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (19:27 IST)
மதுக்கடை திறக்க அனுமதி, டீக்கடை திறக்க அனுமதி இல்லையா? டீ பிரியர்கள் வருத்தம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சற்று முன் அறிவித்த அறிவிப்பு ஒன்று ஜூன் 21 வரை ஊரடங்கு நீடிக்கும் என்றாலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
 
குறிப்பாக ஒருசில கடைகள் திறக்கவும் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சலூன் கடைகள் அழகு நிலையங்கள் உள்பட பல கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்த போதிலும் டீக்கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்படாதது டீ பிரியர்கள் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்
 
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மதுக்கடைகளை திறக்க அனும்தித்த தமிழக அரசு, உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் டீக்கடைகளை திறக்க அனுமதிக்காதது ஏமாற்றத்தைத் தருவதாக டீ பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நிபந்தனைகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்றும் பேருந்துகளை இயக்க தொடர்ந்து தடைவிதித்தது அதிருப்தி தெரிவித்ததாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments