ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு? 15 கிலோ நகை பறிமுதல்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் அதிரடி ரெய்டு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:36 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி  ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினரிடமிருந்து கணக்கில் வராத 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் ஜெகத்ரட்சகன்  தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.2.45 கோடி மதிப்புடைய ஏழு வெளிநாட்டு உயர் ரக வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெகத்ரட்சகன் மகளுக்கு சொந்தமான விடுதியில் இந்த வாட்சுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  

ஜெகத்ரட்சகனுக்கு  சொந்தமான சொத்துக்கள் மற்றும் அசையா சொத்து அசையும் சொத்துக்களை பார்த்து  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments