Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 கோடி வரி ஏய்ப்பு? 15 கிலோ நகை பறிமுதல்.. ஜெகத்ரட்சகன் வீட்டில் அதிரடி ரெய்டு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (06:36 IST)
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் அவரது வீட்டில் 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி  ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினரிடமிருந்து கணக்கில் வராத 15 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் ஜெகத்ரட்சகன்  தொடர்புடைய இடங்களில் இருந்து ரூ.2.45 கோடி மதிப்புடைய ஏழு வெளிநாட்டு உயர் ரக வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெகத்ரட்சகன் மகளுக்கு சொந்தமான விடுதியில் இந்த வாட்சுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  

ஜெகத்ரட்சகனுக்கு  சொந்தமான சொத்துக்கள் மற்றும் அசையா சொத்து அசையும் சொத்துக்களை பார்த்து  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments