Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே! – காலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:22 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னதாக இரண்டு முறை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மேலதிக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அனைத்து கடைகள், தொழில்களும் செயல்பட மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது வாங்க காலையிலேயே மதுப்பிரியர்கள் மதுபானக்கடை முன்பு காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments