Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர்ச்சியாக 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை : குடிமகன்கள் அதிர்ச்சி

தொடர்ச்சியாக 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை : குடிமகன்கள் அதிர்ச்சி

தொடர்ச்சியாக 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை : குடிமகன்கள் அதிர்ச்சி
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (11:56 IST)
முத்துராமலிங்க தேவரின் 109வது பிறந்த நாள் மற்றும் 54வது குருபூஜை காரணமாக மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


 

 
மதுரை மாவட்டத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அந்த சமயத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அக்டோபர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஊர்வலம் செல்வோர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை துவக்கி, பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அமைதியாக சென்றடைய வேண்டும். அதேபோல் இரவு 10 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும். 
 
பட்டாசு வெடிக்கக் கூடாது. பேனர் வைக்கக் கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டுள்ளார் கலெக்டர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு சரக்கு அடிக்க கற்றுக் கொடுத்ததே அவர்தான் : நடிகை ஊர்வசி ஓபன் டாக்