Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் பணி புரிபவர்களுக்கு உரிய பாதுகாப்பும், இல்லை, சம்பள உயர்வும் இல்லை

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (19:16 IST)
கரூரில் உள்ள தனியார் மஹாலில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சிறப்பு அவசர ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தலைவர் கே.கே.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் விஸ்வநாதன் முன்னிலை வகிக்க இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.சிவா செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறுகையில், கடந்த 15 வருடங்களாக டாஸ்மாக்கில் பணிபுரியும் எங்களுக்கு (டாஸ்மாக் கடை) பணி நிரந்தரமில்லை என்றும், சம்பளம் உயர்வு இல்லை என்றதோடு, பாதுகாப்பும் இல்லை என்றார். ஆகவே, வரும் மே 1 ம் தேதி கரூரில் மண்டல மாநாடு நடத்த உள்ளதாகவும், இந்த மண்டல மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும், தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு அரசின் பணத்தை எங்கள் டாஸ்மாக் கடைகள் மூலம் தான் சம்பாதித்து கொடுத்து வருகின்றோம்., கடந்த 15 வருடங்களாக எங்களுக்கு எந்த வித பணி மற்றும் பதவி உயர்வும் இல்லை, சம்பளம் உயர்வும் இல்லை, பாதுகாப்பும் இல்லை என்று வேதனையோடு தெரிவித்தார். இந்த பேட்டியின் போது, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
 

சி.ஆனந்தகுமார்.கரூர்

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments