Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க அரசு ஆலோசனை

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க அரசு ஆலோசனை
, வெள்ளி, 29 மே 2015 (18:52 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்திருக்கும் நேரத்தை பாதியாகக் குறைக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.
 
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தற்போது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவெளி இன்றி டாஸ்மாக் கடை திறந்திருக்கிறது. இதனை மதியம் 2 மணிக்குத் துவக்கி இரவு 10 மணி வரை திறந்து வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழக அரசுக்கு சில ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil