Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அதிகரிப்பு: கோவையில் முக்கிய இடங்களில் டாஸ்மாக் மூடல்!

Webdunia
சனி, 7 ஆகஸ்ட் 2021 (08:37 IST)
கோவையில் ஞாயிற்றுகிழமைகளில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் டாஸ்மாக் கடைகளில் செயல்படும் நேரத்தை குறைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
 
தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இனி மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பின் இது குறித்த அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் டாஸ்மார்க் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே கோவையில் ஞாயிற்றுகிழமைகளில் முக்கியமான 9 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, துடியலூர் சந்திப்பு ஆகிய இடங்களில் 9 மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments