ரூ.2000 நோட்டை வாங்கி கொள்ளுங்கள்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தல்..!

Webdunia
சனி, 20 மே 2023 (12:27 IST)
டாஸ்மாக் கடையில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாயை தந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. 
 
இந்திய ரிசர்வ் வங்கி நேற்று 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இது குறித்து அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 
 
அதன்படி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வருபவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே மது வாங்க செல்வார்கள் டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மது வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments