Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதி லெப்ட்ல போ … பிகில் ரைட்ல போ – 455 கோடி அள்ளிய டாஸ்மாக் !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:03 IST)
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 3 நாட்களில் 455 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை டாஸ்மாக் விற்பனை செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் 5000 டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது. அரசுக்கு வருமானம் அளிக்கக்கூடிய துறைகளில் இப்போது டாஸ்மாக் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கும் பண்டிகை நாட்களில் அதை விட 30 முதல் 50 சதவீதம் அதிகமாகவும் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைத்து வருகிறது. தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கும் முக்கியமான துறையாக டாஸ்மாக் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மட்டும் 455 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது. வெள்ளிக்கிழமை 100 கோடி ரூபாயும், சனிக்கிழமை 183 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 172 ரூபாயும் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு இலக்காக 360 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதை 95 கோடி ரூபாய் அதிக வியாபாரம் நடந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது 325 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments