காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி உடைந்துள்ளதால் தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தண்டலம் ஏரி நிரம்பியது.
இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழை காரணமாக தண்டலம் ஏரி உடைந்தது. இந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நீரில் சுமார் 300 ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.