Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்க்காலில் கவிழ்ந்த டேங்கர் லாரி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

Webdunia
திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:09 IST)
நாகையில் கச்சா எண்ணெயை ஏற்றி கொண்டு வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந்தது.

திருவாரூர் மாவட்டம் களப்பாலில் இருந்து டேங்கர் லாரியில் 25 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கருவேலங்கடை என்ற இடத்தில் நிலைதடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த வாய்க்காலில் விழுந்து கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்த கச்சா எண்ணெய் முழுவதும் வெளியேறி வயல்களில் கொட்டியது. இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் டேங்கர் லாரியை மீட்டனர். இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்’ பெண் சாமியார் கோரிக்கை

சென்னை, மதுரை, தேனியை அடுத்து கடலூரில் ஒரு என்கவுண்டர்.. ரவுடி சுட்டு கொலை..!

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட செல்வப்பெருந்தகை பேச்சு.. அப்படி என்ன பேசினார்?

பானிபூரி சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு: மருத்துவமனையில் அனுமதி..!

உங்களை போல் குடும்பத்தில் இருந்து நாங்கள் தலைவரை தேர்ந்தெடுப்பதில்லை: அமித்ஷா பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments