Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:15 IST)
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தமிழிசை சௌந்தரராஜன் வாபஸ் பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் கனிமொழி அமோக வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு தொடுத்தார்.

இதனையடுத்து சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கனிமொழி வெற்றி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் வழக்கை தொடர விருப்பமில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments