Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..

Arun Prasath
திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:15 IST)
தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தமிழிசை சௌந்தரராஜன் வாபஸ் பெறுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் கனிமொழி அமோக வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், முழுமையாக நிரப்பப்படாத படிவத்தை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும் தமிழிசை சௌந்தரராஜன் வழக்கு தொடுத்தார்.

இதனையடுத்து சமீபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது கனிமொழி வெற்றி மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தெலுங்கானா ஆளுநராக இருப்பதால் வழக்கை தொடர விருப்பமில்லை எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments