Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினர் விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் : ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

Webdunia
புதன், 1 மே 2019 (18:22 IST)
தூத்துக்குடியில் தொகுச-வின் சார்பில்  மே தின பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் சிவப்புச் சட்டை அணிந்துகொண்டு பங்கேற்றார். அவருடன் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி உள்ளிட்டோர் சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தனர்.
பின்னர் அனைவரும் ஊர்வலமாகச் சென்று  மே தின நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.
 
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியதாவது : பிரதமர் மோடி தன்னை நாட்டின் காவலாளி என்று  கூறிக்கொள்கிறார். ஆனால் திமுக தான் உண்மையான காவலாளி, தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தால் உரிமைகள் வந்துசேரும். தொழிலாளர்களை பாதுகாப்பும்  உண்மையான காவலாளி திமுகதான். பிரதமர் மோடி காவலாளி அல்ல. நாட்டின் களவாணியாக இருந்து கொண்டிருக்கிறர் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பக்கத்தில், நாட்டின் பிரதமரை கள்வாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம். ஆட்சி  அதிகாரத்தில் ஊழலையும் லஞ்சத்தையும் இரண்டறக்கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மடியில் கனமிருப்பதால்தானே காவலாளி உங்கள் கண்ணுக்கு தெரிகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments