தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 16 மே 2021 (13:41 IST)
அரபிக்கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை டவ்-தே புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இது குஜராத் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் நிலையில் தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments