Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 24 மணி நேரங்களில் 8 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (12:48 IST)
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கான மழை வாய்ப்பு பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் அந்தமான் தீவுப்பகுதி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments