Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 1 முதல் தமிழக கோயில்கள் திறக்கப்படலாம்… இபாஸ் பக்தர்கள் அனுமதி! ஆலோசனையில் அறநிலையத்துறை!

Webdunia
திங்கள், 18 மே 2020 (09:07 IST)
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் முக்கியக் கோயில்கள் திறக்கப்பட்டு இ பாஸ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டன. இதனால் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கோயில்களைக் குறைவான பக்தர்களுடன் திறக்கலாமா என்பது குறித்து அறநிலையத்துறை ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இணையதளம் மூலம் இ பாஸ் விண்ணப்பித்து அதைக் கொண்டு வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கலாம் என யோசனை செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கோயிலுக்கு 500 பாஸ்கள் வீதம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர் ரெட்டி தலைமையில் உயர் அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அரசுக்கு அறநிலையத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments