Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐநா சபையில் நீட் தேர்வு பற்றி பேசிய தமிழக மாணவி – குவியும் பாராட்டுகள் !

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (07:30 IST)
ஐநா சபையில் உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு பாரட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழ்செல்வத்தின் மகள் பிரேமலதா. இளங்கலை பட்டதாரியான இவர் மனித உரிமை கல்வியையும் கற்றுள்ளார்.  A Path to Dignity: The Power of Human Rights Education என்ற ஆவணப்படத்தில் இவர் மனித உரிமைகள் குறித்துப் பேசியுள்ளார். இதையடுத்து அவருக்கு ஐநா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இடம்பெற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டது. அமர்வில் பேசிய அவர் இந்தியாவில் நீட் தேர்வால் பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி பேசியுள்ளார். இதையடுத்து நாடு திரும்பிய அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேமலதா பேச்சுக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments