Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றரை வயது குழந்தைக்கு கொரோனா! – கன்னியாக்குமரியில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (09:56 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒன்றரை வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் முன்பு இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பாதிப்புகள் லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி செலுத்துதல் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.

அவ்வாறாக தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் கன்னியாக்குமரி தோவாளையில் ஒன்றரை வயது குழந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குழந்தையின் தாத்தாவுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது குழந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments