Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் மூடல்: இன்றே படையெடுக்கும் மதுவிரும்பிகள்!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (09:51 IST)
நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஊரடங்கை செயல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் நாளை டாஸ்மாக்குகளை முழுவதுமாக மூடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாளை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இன்று காலை மதுக்கடைகள் திறக்கும் முன்னரே மதுவிரும்பிகள் டாஸ்மாக் முன்னர் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை டாஸ்மாக் செயல்படாது என்பதால் மதுவை கள்ள மார்க்கெட்டில் விற்க முயன்றால் அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments