Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டாஸ்மாக் மூடல்: இன்றே படையெடுக்கும் மதுவிரும்பிகள்!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (09:51 IST)
நாளை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஊரடங்கை செயல்படுத்துமாறு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே டாஸ்மாக் அருகே செயல்படும் பார்கள் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில் நாளை டாஸ்மாக்குகளை முழுவதுமாக மூடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாளை கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதால் இன்று காலை மதுக்கடைகள் திறக்கும் முன்னரே மதுவிரும்பிகள் டாஸ்மாக் முன்னர் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நாளை டாஸ்மாக் செயல்படாது என்பதால் மதுவை கள்ள மார்க்கெட்டில் விற்க முயன்றால் அதுகுறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments