Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவப்பு மண்டலத்தில் தொடரும் மாவட்டங்கள் எவை? – பட்டியல் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (09:56 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகள் எவை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு மே 3 உடன் முடிய உள்ள நிலையில், ஊரடங்கிற்கு பிறகும் சிவப்பு மண்டலாக தொடரும் மாவட்டங்கள் எவை என பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக தொடர்கின்றன. ஆபத்து குறைந்த ஆரஞ்சு மண்டலங்களாக தேனி, தென்காசி, நாகப்பட்டிணம், திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், சேலம், கரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களும் உள்ளன. தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மட்டும் கொரோனா இல்லாத பாதுகாப்பான பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments