தூய்மையற்ற ரயில் நிலையங்கள் பட்டியலில் 6 இடங்களை பிடித்த தமிழ்நாடு…

Arun Prasath
சனி, 5 அக்டோபர் 2019 (13:24 IST)
இந்தியா முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களை ஆய்வு செய்த மத்திய அரசு, தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள 720 ரயில் நிலையங்களை, ஆய்வு செய்த மத்திய அரசு தூய்மையான மற்றும் தூய்மையற்ற ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட  தமிழ்நாடு ரயில் நிலையங்கள் எதுவும் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

ஆனால் தூய்மையற்ற ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை தமிழ்நாடு ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளது. அதன் படி, பெருங்குளத்தூர், கிண்டி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, சிங்கம்பெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரயில் நிலையங்கள், முதல் பத்தில் ஏழு இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜம்மு தவாய், விஜயவாடா, ஹரித்வார் ஆகிய நகரங்களின் ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் அல்லாதோருக்கு மது விற்பனை செய்யலாம்! சவுதி அரேபியாவில் முதல் முறையாக அனுமதி..!

காருக்குள் திருமணமான தம்பதிகள் அந்தரங்கம்.. சிசிடிவி வீடியோ காட்டி மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது..!

1 லட்ச ரூபாய் கொடுத்தால் முஸ்லீம்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள்: அசாம் முதல்வர்

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments