Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வரும் தடுப்பூசி.. ஆனா இவ்ளோதான் லிமிட்! – அரசு திட்டம்!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (10:26 IST)
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கிட்டத்தட்ட தயார் நிலைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக நாடுகளை கடந்த ஒரு ஆண்டு காலமாக அச்சுறுத்தி வந்த கொரோனாவிலிருந்து விடுபட கிட்டத்தட்ட தடுப்பூசிகள் கிடைத்துவிட்டன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகளில் குணப்படுத்தும் விகிதம் மாற்றத்துக்கு உள்ளானவையாக இருப்பதால் எந்தெந்த தடுப்பூசிகளை வாங்குவது என இந்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசிகளை இருப்பு வைக்கவும், விநியோகிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 2,800 இடங்களில் தடுப்பூசிகளை இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 51 மையங்களில் பதப்படுத்தும் வசதி உள்ளது. இதன் மூலம் மொத்தம் 2 கோடி தடுப்பூசி வரை இருப்பு வைக்க முடியும். எனினும் தமிழகத்தில் முதல்கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments