Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பாணியில் உதார்விட்டு மாட்டிக்கொண்ட கருணாஸ்

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (18:58 IST)
நடிகர் கருணாஸுக்கு கூலிப்படையுடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகப்படும் காவல்துறை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.


கடந்த வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட கருணாஸ் சர்ச்சைக்குரியப் பல கருத்துகளைக் கூறினார். அவர் பேசிய பேச்சுகளே தற்போது அவருக்கு வினையாக வந்து வந்து நிற்கின்றன.

அந்த கூட்டத்தில் கருணாஸ் தொண்டர்களிடையே கூறியதாவது,

தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் எல்லாம் கொலை செய்யும் ஆட்கள். கொலை கூட செய்யுங்கள் ஆனால் என்னிடம் சொல்லிவிட்டு செய்யுங்கள். ஜெயிலுக்கு செல்லும் நிலை வந்தால் கூட பிக்னிக் போல சென்று வாருங்கள் உங்கள் குடும்பத்தை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டமே தி நகர் சரக துணை ஆணையர் அரவிந்தனுக்கு எதிராகத்தான். இந்த கூட்டத்தை நடத்த 10 லட்ச ரூபாய் செல்வாகியுள்ளது. அடிக்கடி இதே போல செல்வு செய்ய முடியாது. அதனால் மேலும் எங்களிடம் பிரச்சினை செய்தால் அடுத்தமுறை இந்த பத்து லட்சத்தை வேறு வழியில்தான் செலவழிக்க வேண்டும்.

இதில் அவர் கூறிய வேறு வழியில் செலவழிக்க வேண்டும் என அவர் கூறியது கொலைமிரட்டல் விடும் விதமாக உள்ளது என போலீஸ் சந்தேகப்படுவதாக தெரிகிறது. இதனால் அவருக்குக் கூலிப் படையினரோடு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என்றும் அதனால் அவரைப் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments