Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்துவோம்! – எல்.முருகனுக்கு காவல்துறை அனுமதி!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:54 IST)
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரை நடத்த அரசு தடை விதித்த நிலையில் திருத்தணிக்கு வேல் யாத்திரை புறப்பட்ட எல்.முருகனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திருத்தணிக்கு வேல் யாத்திரை புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி புறப்பட்ட அவரை நசரத்பேட்டை அருகே காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காவலர்களுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் எல்.முருகனோடு 5 வாகனங்கள் மட்டும் செல்ல காவல் துறை அனுமதித்ததாகவும், மற்றவர்களை திரும்ப செல்ல அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு தடை விதித்த நிலையிலும் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என எல்.முருகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments