Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக போலீசாரின் லட்சணம் இதுதான்: வறுத்தெடுத்த விஜயகாந்த்

தமிழக போலீசாரின் லட்சணம் இதுதான்: வறுத்தெடுத்த விஜயகாந்த்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (01:17 IST)
உயர் நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் தமிழக போலீஸ் படை விட, மத்திய போலீஸ்படை பாதுகாப்புத்தான் தேவை என தலைமை நீதிபதியே கூறியுள்ளதில் இருந்தே, தமிழக போலீசாரின் லட்சணத்தை தெரிந்து கொள்ளலாம் என விஜயகாந்த் மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக மக்களுக்கோ, எதிர்க்காட்சி, தலைவரான எனக்கோ பாதுகாப்பு அளிக்க தமிழக போலீசாருக்கு நேரம் இல்லை. ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டும் போதும் என அவர்கள்  செயல்படுகின்றனர்.
 
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு கூட பாதுகாப்பு கோரி நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது. எங்கள் கட்சி கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உயர் நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் தமிழக போலீஸ் படை விட, மத்திய போலீஸ்படை பாதுகாப்புத் தான் தேவை என தலைமை நீதிபதியே கருத்து கூறியுள்ளார். இதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்றும், தமிழக போலீசாரின் லட்சணத்தையும் தெரிந்து கொள்ளலாம் என்று மிகவும் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil