Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா நபருடன் வந்த 47 தமிழர்கள்: கொரோனா அபாயம்!

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (10:46 IST)
பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த நபருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரோடு 47 தமிழர்களும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஹ்ரைனிலிருந்து கேரளா வந்த விமானத்தில் பயணித்த கேரளாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடஹி தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பயணித்த விமானத்தில் அவரோடு 47 தமிழர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற பீதி எழுந்துள்ள நிலையில் அவர்களது விவரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் வீடுகளில் இருந்தபடியே கவனிக்கப்படுவார்கள் என்றும் தமிழக பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு சென்னைக்கு வரும் 19 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments