Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகள் திறப்பு? – விரைவில் அறிக்கை சமர்பிக்க திட்டம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:17 IST)
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 15ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்” என கூறியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments