Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டோஸ் போட முக்கியத்துவம்..! – தொடங்கியது மெகா தடுப்பூசி முகாம்!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (08:09 IST)
கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் 9வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் முன்னதாக கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக வேகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இரண்டாவது டோஸ் போடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் முகாம்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க இனி வாரத்தில் வியாழன், ஞாயிறு இரண்டு நாட்கள் மெகா முகாம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments