Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (10:38 IST)
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் மழை பெய்து வரும் நிலையில் வடகிழக்கு பருவமழை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக மழை பெய்து வருகிறது. வழக்கமான வடகிழக்கு பருவமழை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று காலதாமதமாக இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில் நாளை முதல் கடலோரா மாவட்டங்களாக திருவாரூர், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடங்க உள்ளதாகவும், வங்க கடலின் வடக்கு பகுதி மற்றும் அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments