Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பின்தங்கிய தமிழகம்! – இந்திய அளவிலான பட்டியல்!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:39 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தமிழகம் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மே 23 வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பற்றி வெளியாகியுள்ள தரவுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட பின் தங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 16.1 சதவீதமும், 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 36 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 41.5 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 9 சதவீதமும், 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள் 18 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 18 சதவீதமும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தமிழகத்தை ஒப்பிடும்போது காஷ்மீர், லடாக், ராஜஸ்தான், திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் அதிக சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments