Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் புயல்; 26 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (08:42 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக உள்ள நிலையில் இன்று 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுவடையும் வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: தீபாவளி இப்படிப்பட்ட பண்டிகையா? நியூயார்க் மேயர் எடுத்த முடிவு!

அதன்படி, இன்று கன்னியாக்குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘சிட்ரங்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 24ம் தேதி வலுவடைந்து மேற்கு வங்கம் நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments