Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இயல்பை விட டபுள் மடங்கு பெய்த மழை! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:11 IST)
கடந்த சில காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் இயல்பை விட மழை அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முதலாகவே பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த வாரமும் கனமழை நீடித்து வரும் சூழலில் பல பகுதிகளில் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இயல்பை விட 100 சதவீதத்திற்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

ஆகஸ்டு மாதத்தில் மட்டும் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும்போது 93 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. இந்த விகிதமானது கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது உச்சப்பட்ச மழை அளவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு.! நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வாழ்த்து..!!

78,000ஐ தாண்டி உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ் .. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு.. விளக்கமளித்த காவல்துறை..!

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments