Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கொரோனா பாதிப்புகளில் 85 சதவீதம் ஒமிக்ரான் அறிகுறி..! – அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (10:02 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒமிக்ரான் அறிகுறிகள் அதிகம் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் இருவகை கொரோனா வேரியண்டுகளும் வேகமாக பரவ தொடங்கியுள்ளன. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி, முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தினசரி தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரம் வீதமாக பதிவாகி வருகிறது. இதில் 85 சதவீதம் ”எஸ் ஜீன்” ஒமிக்ரான் வகை அறிகுறிகளாக உள்ளன. 15 சதவீதம் டெல்டா வகை கொரோனா பாதிப்புகள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.

மேலும் “60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.” என்று கூறியுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் அவசியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments