Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா! – சமூக பரவலாகுமா?

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (08:57 IST)
புதிய வகை கொரோனா பரவுவதால் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீரியமிக்க புதிய கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என 2,391 பேரின் பட்டியலை தயாரித்து தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படாததால் சமூக பரவலாகுமா என்பது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments