Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டன் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் கொரோனா! – சமூக பரவலாகுமா?

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (08:57 IST)
புதிய வகை கொரோனா பரவுவதால் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வீரியமிக்க புதிய கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பிரிட்டனில் வாழும் இந்தியர்கள் பலர் நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரிட்டனிலிருந்து தமிழகம் திரும்பியோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என 2,391 பேரின் பட்டியலை தயாரித்து தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படாததால் சமூக பரவலாகுமா என்பது குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments