Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை நாங்களே ஏற்கிறோம் – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 9 மே 2020 (11:41 IST)
தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான செலவை தமிழக அரசே ஏற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழலில் தவித்து வந்தனர். இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து சம்பந்தபட்ட மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒருவேளை சம்பந்தபட்ட மாநிலங்கள் தொழிலாளர்களுக்கு பயணம் செய்வதற்கான செலவை செய்ய மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments