Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசு வழங்கும் ரூ.2000 ஒருவித லஞ்சம் - சீமான் அதிரடி

Webdunia
ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (16:29 IST)
தமிழக  அரசு தற்போது மக்களுக்கு ரூ..2000 பணம் வழங்குவதாக அறிவித்துள்ளது ஒரு விதமான லஞ்சம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் தமிழக வீரர்கள். இதை மன்னிக்கவே முடியாது. தீவிரவாதிகளின் வாகனம் வரும் வரை சோதனைச் சாவடிகளே இல்லையா...சரியான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா இல்லையா என்பது சந்தேகம் உண்டாக்குகிறது.நம் நாட்டில் ராணுவ வீரர்களுக்கே பாதுகாப்பு இல்லை நாட்டில் உள்ள மக்களையும் பயமுறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும் தமிழக் அரசு மக்களுக்கு ரூ. 2000 வழங்குவதாக அறிவித்துள்ளதும் ஒரு வகையான லஞ்சமே. மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு ரூ. 6000 தருவதாக பட்ஜெட் தாக்கலின் பொது தெரிவித்தது. நம் நாட்டில் விவசாயிகளுக்கு ரூ. 6000 ரூபாய்தான் கொடுக்கும் நிலை உள்ளது. நம் எவ்வளவு பின்தங்கிய தேசமாக இருக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும்.வரும் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்க்காக  நான் கட்சி தொடங்கவில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments