தமிழக அரசின் புதிய தகைசால் தமிழர் விருது! – முதலாவதாக பெறும் என்.சங்கரய்யா!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (12:09 IST)
தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு தகைசால் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் முதல் விருது என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் பல்வேறு கலைஞர்கள், சமூக செயற்பாட்டளர்களுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவர்களை கௌரவிக்கும் விதமாக தகைசால் தமிழர் என்ற புதிய விருதை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விருது முதலாவதாக பொதுவுடமை இயக்க தலைவர் என்.சங்கரய்யாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான என்.சங்கரய்யா, சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவரும் ஆவார். என்.சங்கரய்யா சமீபத்தில் தனது நூறாவது பிறந்தநாளை கொண்டாடினார்.

எதிர்வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா அன்று என்.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருதும், ரூ.10 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments