Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு! – விருது தொகை உயர்வு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:32 IST)
தமிழக அரசின் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயரில் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருது தொகையாக அவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விருதுகளுக்கான நபர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் விருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விருது தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விருது தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழை ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments