தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு! – விருது தொகை உயர்வு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:32 IST)
தமிழக அரசின் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயரில் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருது தொகையாக அவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விருதுகளுக்கான நபர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் விருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விருது தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விருது தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழை ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments