Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு! – விருது தொகை உயர்வு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (12:32 IST)
தமிழக அரசின் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுக்கான நபர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் பெயரில் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கான விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விருது தொகையாக அவர்களுக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த விருதுகளுக்கான நபர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கார் விருந்து ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விருது தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விருது தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழை ஜனவரி 15 திருவள்ளுவர் தினத்தன்று முதல்வர் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments