Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு குழு! – சென்னையில் அதிரடி நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (15:42 IST)
சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்த நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3உடன் கொரோனா ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையாமலே இருந்து வருகிறது. முக்கியமாக தலைநகர் சென்னையில் நிலவரம் மிகவும் கட்டுக்கடங்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் சென்னையில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. அதன்படி சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறப்பு அதிகாரிகளாக துணை டிஜிபிக்கள் மகேஷ்குமார், ஆபாஸ் குமார், அமரேஷ் புஜாரி உள்ளிட்ட அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு குழுக்களின் தீவிர செயல்பாடுகளின் மூலம் சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments