Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலை மூடல் – தமிழக அரசுக்கு முழு அதிகாரம் !

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (09:09 IST)
ஸ்டெர்லைட் ஆடையை மூடியது சம்மந்தப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு சார்பில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் வேதாந்தா தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தமிழக அரசு தன் வாதத்தை முன்வைத்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணை வந்தபோது தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாதன்’ மாசு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் நீர் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது. ஸ்டெர்லைட் ஆலை அதிகக் கழிவுகளை வெளியேற்றி வந்ததாலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது,’ என வாதிட்டார்.

இந்நிலையில் தமிழக அரசு வாதம் முடியாத நிலையில் வழக்கு விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments