Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழிபாட்டு தலங்களை திறப்பதாக சொல்லவில்லை! – அரசின் திடீர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (11:40 IST)
மத்திய அரசு நாளை முதல் வழிபாட்டு தலங்களை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழக அரசு அறிவிப்புகள் எதுவும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்களை திறந்து கொள்ள அனுமதி அளித்தது, அதை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம், சபரிமலை நிர்வாகம் போன்றவை வழிபாட்டு தலங்களை திறக்க தயாராகியுள்ளன, திருப்பதியில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து 3ம் தேதியன்று தலைமை செயலர் மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் நாளை தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழிபாட்டு தலங்களை நாளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கவில்லை என அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பது தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments