விமான பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்! – தமிழக அரசு வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (08:39 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமான பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் புதிதாக 3 ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில் சீனாவில் அதிகமாக வைரஸ் பரவி வருவதால் சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து தமிழ்நாடு வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments