Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் இதுதான்! – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (15:05 IST)
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பை அமைச்சர் கருப்பணன் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் எதிர்வரும் நவம்பர் 14 அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காற்று மாசுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பட்டாசு வெடிப்பதையே தடை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதற்கான கால அவகாசம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அரசு அனுமதித்த நேரத்திற்குள்ளாக மக்கள் பட்டாசு வெடித்து பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட வாழ்த்துக்கள் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments