Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (10:59 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்கள் உதவி தேவைப்படும் பட்சத்தில் www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது 044-28515288, 96000 23645, 99402 56444 என்ற எண்களுக்கோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments