இன்று அறிமுகமாகிறது குட்டி கேஸ் சிலிண்டர்கள்! – சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (09:34 IST)
தமிழ்நாட்டில் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் நலம் பெறும் விதமாக குட்டி சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சிறு வியாபாரிகள், நடைபாதை உணவகங்களுக்கு உதவும் வகையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட இரண்டு குட்டி கேஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ALSO READ: தமிழர்கள் இந்துக்கள் இல்லை.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #TamilsAreNotHindus

இந்நிலையில் இன்று இந்த சிலிண்டர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார். 2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘முன்னா’ எனவும், 5 கிலோ கேஸ் சிலிண்டருக்கு ‘சோட்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிறிய கேஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

இன்று முதற்கட்டமாக திருவெல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தின் சுயசேவை பிரிவுகள் மூலம் இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்படுகிறது. இந்த கேஸ் சிலிண்டர்களை பெற எதாவது ஒரு அடையாள அட்டையை மட்டும் சமர்பித்தல் போதும் என கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments