Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தொடங்குகிறது +2 தேர்வுகள்: தயாராகும் மாணவர்கள்!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (09:10 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 7,276 பள்ளிகளை சேர்ந்த 8,16,359 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுதும் 19,166 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

பொதுத்தேர்வில் வகுப்பறை கண்காணிப்பு பணியில் 42 ஆயிரம் ஆசிரியர்களும், முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 24ல் முடிவடையும் இந்த தேர்வுகளின் முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வில் முறைகேடு செய்பவர்களுக்கான தண்டனைகளையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி துண்டு சீட்டு, விடை குறிப்புகல் வைத்திருந்தால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படும். காப்பி அடித்தால் தேர்வு எழுத இரண்டு ஆண்டுகள் தடையும், வினாத்தாளை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments