Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாலை அணிவிக்க கட்டுப்பாடு! – தமிழக அரசு!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (10:24 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் அம்பேத்கர் மற்றும் தீரன் சின்னமலை பிறந்த தினத்தை கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 14 அன்று சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளும், ஏப்ரல் 17 சுதந்திர வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளும் கொண்டாடப்பட உள்ளன. இருவரது பிறந்தநாள்களும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழக அரசு புதிய உத்தரவை விதித்துள்ளது.

அதன்படி சென்னை துறைமுக பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலை ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிந்து மரியாதை செய்வார். மற்ற எவருக்கும் மாலை அணிவிக்க அனுமதி இல்லை. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் மாவட்டம்தோறும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments