தமிழகத்தில் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி ரத்து! – அரசு அறிவிப்பால் கட்சிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (09:28 IST)
தமிழகத்தில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதை அரசு திரும்ப பெற்றுள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடக்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் மாதம்தோறும் மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கவும், 100 பேர் வரை கலந்து கொள்ளும் அரசியல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், அரசியல் கூட்டங்கள், சமுதாய நிகழ்வுகள், கல்வி மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த அளிக்கப்பட்டுள்ள அனுமதியும் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீண்டும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அடுத்த மாத தளர்வில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

ரிசார்ட்டில் நடந்த 'ரேவ் பார்ட்டி’.. 14 பெண்கள் உள்பட 50 பேர் கைது..!

கேரளாவின் 2 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் மனித எலும்புக்கூடு.. இறந்தவர் தமிழகத்தை சேர்ந்தவரா?

சாதி கணக்கெடுப்பில் பங்கேற்க முடியாது: நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி தம்பதி உறுதி..!

'இந்தி எதிர்ப்பு மசோதா' கொண்டு வரும் திட்டம் இல்லை: உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments